PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, November 18, 2013

கடவுளே போதும் நிறுத்து...


கடவுளே...............ஏய் கடவுளே...............
போதும் நிறுத்து உந்தன் பெண்ணின் படைப்பு
பெண் பூவை காட்டி ஆளைத்தின்னும் சேலை நெருப்பு..
பெண்ணின் சொல்லுக்கு அட என்ன மதிப்பு
அவள் சொல்லுக்கடியில் பொய்யும் நஞ்சும் கொட்டிக்கிடக்கு
நெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
கண்கள் கலங்குதே கலங்குதே..
ஆண்கள் எல்லாம் மணல் வீடுகள்
பெண்கள் வந்து விளையாடுங்கள் விளையாடுங்கள்
பெண்கள் வந்து விளையாடுங்கள் விளையாடுங்கள்
ஏய்....கடவுளே....

பூவுக்கு அடியிலும் நாகமுண்டு இது விஞ்ஞானம் சொல்கின்ற உண்மை
பூவைத்தும் நாகங்கள் அலைவதுண்டு இது என்ஞானம் காண்கின்ற உண்மை
காதல் வந்தால் குயிலைப் போல கொஞ்சி கொஞ்சி கத்துவாள்
காலம் வந்தால் கொக்கை போல கண்ணைமட்டும் கொத்துவாள்.
இறைவா பூமி வந்தால் நீ பெண்ணை கண்டு ஓடுவாய்
பாவம் ஆண்கள் என்று நீ சொல்லி சொல்லி பாடுவாய்
பெண் என்றால்.......... எல்லாம் பொய்கள்தானா..........
நெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
கண்கள் கலங்குதே கலங்குதே இது நியாயமா...மா.....?
கடவுளே....

காற்றென நானும் இருந்தேனே பெரும்புயலாக நீ என்னை செய்தாய்,
பூவென நான் உன்னை நினைத்தேனே ஒரு பூகம்பம் போல் வந்து சென்றாய்.
சந்தர்ப்பங்கள் மாறும்போது சத்தியத்தை கொல்வதா?
பச்சோந்திக்கும் உங்களுக்கும் பந்தபாசம் உள்ளதா?
மிருகம் என்னில் ஒன்று நான் உன்னால் இன்று கண்டேனே
காதல் இல்லா கிரகம் இனி என்னைக்கொண்டு சேர்ப்பேனே.
என் வாழ்க்கை..........திசைமாறியதே.............
நெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
கண்கள் கலங்குதே கலங்குதே.. இது நியாயமா...மா.....? 
கடவுளே...

கடவுளே...............ஏய் கடவுளே...............
போதும் நிறுத்து உந்தன் பெண்ணின் படைப்பு
பெண் பூவை காட்டி ஆளைத்தின்னும் சேலை நெருப்பு..
பெண்ணின் சொல்லுக்கு அட என்ன மதிப்பு
அவள் சொல்லுக்கடியில் பொய்யும் நஞ்சும் கொட்டிக்கிடக்கு
நெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
கண்கள் கலங்குதே கலங்குதே..
ஆண்கள் எல்லாம் மணல் வீடுகள்
பெண்கள் வந்து விளையாடுங்கள் விளையாடுங்கள்.....ஏய்....
கடவுளே.............கடவுளே..........