PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, October 29, 2014

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...

படம்: புதிய பறவை
இசை: விஸ்வநாதன்–ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்



எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே ஓ.. உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...

ஆசையில் பிறப்பது துணிவு...

படம்: தென்றல் வீசும்
இசை:
பாடியவர்: P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்



ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு

ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு

ஆசையில் பிறப்பது துணிவு

விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை
காதலன் நினைவில் கன்னியின் ஆசை
விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை
காதலன் நினைவில் கன்னியின் ஆசை
பாவலன் மனதில் பாடிடும் ஆசை
பாவலன் மனதில் பாடிடும் ஆசை
படைத்தவன் மனதில் நொடிக்கொரு ஆசை
படைத்தவன் மனதில் நொடிக்கொரு ஆசை

ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு

இளமையில் புதுமைகள் படிப்பதில் ஆசை
முதுமையில் படித்ததை நினைப்பதில் ஆசை
இளமையில் புதுமைகள் படிப்பதில் ஆசை
முதுமையில் படித்ததை நினைப்பதில் ஆசை
வருவதும் போவதும் காலத்தின் ஆசை
வருவதும் போவதும் காலத்தின் ஆசை
திருமண வயதில் தினமொரு ஆசை
திருமண வயதில் தினமொரு ஆசை

ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு...

ஆறு மனமே ஆறு...

படம்: ஆண்டவன் கட்டளை
இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்



ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆடிய ஆட்டமென்ன?...

படம்: பாத காணிக்கை
இசை: T K ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்



ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு...

ஆடி அடங்கும் வாழ்க்கையடா...

படம் : நீர்க்குமிழி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : வி.குமார்
இயற்றியவர் : 'உவமைக் கவிஞர்' சுரதா



ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா...

அவள் பறந்து போனாளே...


படம் - பார் மகளே பார்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி.பி. ஸ்ரீநிவாஸ்


அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள்ரெண்டைக் கவர்ந்து போனாளே...

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...

படம்: அஞ்சான்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: Andrea Jeremiah , Surya
வரிகள்: ந. முத்துகுமார்


Ek Do Teen HD... by pakeecreation

ஓ ஓ ஓ …
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
நீ சாஞ்சு பாத்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா பத்துதடி
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி

ஹே ஏக் தோ தீன் சார்
ஏக் தோ தீன் சார்

அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட
என்ன தள்ளி நின்னு நெஞ்சோட நான் தேட
ஹே …
என் நெத்தியில் தான் தொட்டு இப்போ மழை பாட
அது நட்டநடு உதட்டுக்கு பாய்ந்தோட
ஹே …
மலை மேல போகும் மேகம் எல்லாம்
இப்ப தலைமேல வந்து தொட்டு தொட்டு தூறுதே… ய ய ய

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி

ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா
அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிமா… அ அ அ
அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற
நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற
ஹேய் பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன்
காத்த போல வந்து மேல தூக்கிப் போறேண்டி … டி டி டி…
ஆ ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன்
நான் ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்கிறேன்
நீ சாஞ்சா நெஞ்சில் தான்கிக்குறேன்
உன்ன மடியில வாங்கிக்குறேன்
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி...

Thursday, July 10, 2014

அம்மம்மா தம்பி என்று நம்பி...


படம்: ராஜபார்ட் ரங்கதுரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்


அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்

அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ

அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்

கையில் வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு இது
இதை சொந்தமின்றி பந்தமின்றி
வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு

ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின்
உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை
நானும் கண்டேனே
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின்
உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை
நானும் கண்டேனே
அது நாடகமா இது நாடகமா
அது நாடகமா இது நாடகமா
இங்கு நான் காணும் வேஷங்கள்
கொஞ்சம் அல்லவே
நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே

அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்

தங்கை எனும் இளைய கன்று
தாய் வீடு வந்ததென்று
என்னுடைய நாடகத்தில் காட்சி
அவள் கொண்டவனை பிரிந்து வந்து
கோலம் கொண்டு நின்றதனை
கண்டதற்க்கு இன்னொருவன் சாட்சி

கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை
கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன்
நெஞ்சில் எழுகிறது
கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை
கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன்
நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோ இது வேஷமன்றோ
அது பாசமன்றோ இது வேஷமன்றோ
அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழையால்லவா

அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ

அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்...

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்...

படம்: ஆண்டவன் கட்டளை
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்





அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னை இளங்கீற்றினிலே ஏ... ஏ..
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓ..ஓ..

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்...

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்...

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: ஹரிஹரசுதன் / சூரஜ் சந்தோஷ்
வரிகள்: கண்ணதாசன்




அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்...

அடி என்னடி ராக்கம்மா...

படம்: பட்டிக்காடா பட்டணமா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்


அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு
என் ராஜாயி

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க செவப்பு
மச்சான இழுக்குதடி

அஞ்சாறு ரூபாய்க்கு மணி மால
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அஞ்சாறு ரூபாய்க்கு மணி மால
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூரு மீனாட்சி பார்த்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
அஹ அம்மூரு மீனாட்சி பார்த்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி


தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி
அஹ சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி

அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன்
ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு என் மூக்கு என் பல்லு
என் ராஜாயி கல்யாண வைபோகமே

அட பிபிபி டும்டும்டும் பிப்பீபி டும்டும்டும்
பிப்பீபி டும்டும் டும்டும் டும்
அட பிபிபீ பீபீபீ பீபீபீ டும்டும்டும்
பிப்பீபி டும்டும் டும்டும் டும்...

அச்சம் என்பது மடமையடா...

படம்: மன்னாதி மன்னன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்



அச்சம் என்பது மடமையடா 
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா 
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

கனக விஜயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன் 
கனக விஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏந்தி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
     
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
    
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா...

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி...

படம்: சரஸ்வதி சபதம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்




அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய் அம்மா பேச வைத்தாய்
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி...