PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, August 13, 2011

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...

Song : Mannil Indha Kadhal
Movie : Keladi Kanmani
Year : 1990



மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ...

தென்மதுரை வைகை நதி...




பாடல் : Thenmadurai Vaigai Nadhi
படம் : தர்மத்தின் தலைவன்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா, மலேசியா வாசுதேவன்
வருடம் : 1988


தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தேய்கின்றது
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தென்மதுரை வைகை நதி

நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய்க் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தென்மதுரை வைகை நதி

நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
உன்னோடுதான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீதானம்மா என் தாரம்
மாறாதம்மா என்னாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தேய்கின்றது
பொன் மாலை நிலா
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தென்மதுரை வைகை நதி...

ராஜ ராஜ சோழன் நான்...




பாடல் : Raja Raja Cholan
படம் : ரெட்டைவால் குருவி
பாடியவர் : K.J.யேசுதாஸ்
வருடம் : 1987


ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே

கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே...

இள நெஞ்சே வா...

பாடல் : Ila Nenje Vaa
படம் : வண்ண வண்ண பூக்கள்
வருடம் : 1991



இள நெஞ்சே வா…
நீ இங்கே வா...

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்..

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்

பச்சைப்புல் மெத்தை விரிக்கும்
அங்கே இளம் தத்தைகள் தத்தி குதிக்கும்
பட்டு பூ மொட்டு விரிக்கும்
செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள் தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன் பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடைப்போலே வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம் செம்மீன் தேடுதே
இந்நேரம்..

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்..

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்

அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டி குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்
வர்ணித்து பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனைத் தேரில் ஏறியே
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும் என்னை தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு விண்ணை தீண்டுதே
இந்நேரம்..

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்..

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்...

நிலா காயும் நேரம் சரணம்...




Song : Nila Kaayum Neram
Movie : Chembaruthi
Singers : Mano, S.Janaki
Year : 1992

நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே

நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

தென்றல் தேரில் நான் தான்
போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூ தூவி
பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க
திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே
கங்கை வந்து நீராட்டும்
நினைத்தால் இதுப் போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான்
நீங்காது பூ மாது
நெடு நாள் திருத்தோள்
எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

மின்னல் நெய்த சேலை
மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல்
மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும்
ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட
ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும்
ஆனந்த யாகம்
சிலிர்க்கும் அடடா
ஸ்ரீதேவி பூந்தேகம்
அணைத்தும் வழங்கும்
காதல் வைபோகம்

அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே

நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே

நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்...

மாலை என் வேதனை கூட்டுதடி...




பாடல் : Maalai En Vethanai
படம் : சேது
வருடம் : 1999

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏன்டா அம்பி
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பன்ஸ் என்ன அம்பி
காதல் செஞ்ச பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்கமும் தோன்றிடுமா

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ
வாசங்கள் பேசாத பதிலா தம்பி
மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ
கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி
அவளின் மௌனம் பார்த்து பதை பதைக்கும் என் மனம்
வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்
மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே
என் மனம் அவள் மடி சாய்கிறதே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி...

நான் தேடும் செவ்வந்திப் பூவிது...




பாடல் : Naan Thedum
படம் : தர்மபத்தினி
வருடம் : 1986

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழியில்லையோ
பருவ குயில் தவிக்கிறதே
சிறகு இரண்டும் விரித்துவிட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன் மானே என் யோகம்தான்
பெண் தானோ சந்தேகம்தான்
என் தேவி
ஆ... ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ
தள்ளாடும் வெண் மேகம்தான்
என்னாலும் உன் வானம் நான்
என் தேவா
ஆ... ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது...

இந்த மான் உந்தன் சொந்த மான்...




பாடல் : Indha Maan
படம் : கரகாட்டக்காரன்
பாடியவர்கள் : சித்ரா, இளையராஜா
வருடம் : 1989


இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்..

வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே... ஆ... ஆ.. ஆ.. ஆ..
அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன்
எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன்விழி தான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தான்... ஆ... ஆ.. ஆ.. ஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் எந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னவனே...

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி...




பாடல் : Aasayile Pathi Katti
படம் : எங்க ஊரு காவல்காரன்
பாடியவர் : பி.சுசீலா
வருடம் : 1988


ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே நீதான் பாட வச்சே
நானா பாடலியே நீதான் பாட வச்சே

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி

வைகையில் வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது
பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி நீ அங்கே வந்து சேரு
விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு
நீ வாயேன் வழி பாத்து

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி

கண்ணுதான் தூங்கவில்ல காரணம் தோணவில்ல
பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல
கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல
கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே நீதான் பாட வச்சே
நானா பாடலியே நீதான் பாட வச்சே

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி...

பூங்கொடிதான் பூத்ததம்மா...

படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்



பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன் வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா
(பூங்கொடி..)

ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடம் தன்னில் எறிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரை பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கடஹ்வுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப்போல்
(பூங்கொடி..)

தாய்க்கூட அழுகின்ற பிள்ளைக்குத்தானே
பசியென்று பறிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்கு காதலென்ன ஊமைக்கும் பாடலென்ன ஓ
(பூங்கொடி..)


வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி...




Song : Velli Kolusu Mani
Movie : Pongi Varum Kaveri
Singers : Arunmozhi, Chithra
Year : 1989

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேர்த்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்
பொன்னி நதிப்போல நானும் உன்ன
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா
காத்து காத்து நானும் பூத்துப் பூத்துப் போனேன்
சேர்ந்து பாடும்போது தேரில் ஏறலானேன்
உன் பேரச்சொல்லி பாடி வச்சா ஊருதம்மா தேனே

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேர்த்ததென்ன

கண்ணத் தொறந்தேன் நெஞ்சில் விழுந்த
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்
எண்ணம் முழுதும் பொங்கி வழியும்
வாங்கினது நல்ல வரம்தான்
கண்ணத் தொறக்காம மூடிகிட்டேன்
நெஞ்சில் வச்சு அடச்சு புட்டேன்
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டி புட்டேன்
சாவியத்தான் தொலச்சு புட்டேன்
உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு
மெழுகப் போல நானும் உருகிப்போனேன் கேட்டு
காலமெல்லாம் கேட்டிடத்தான் காத்திருக்கேன் பார்த்து

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேர்த்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன...

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக...



Song : Kannale Kadhal
Movie : Aathma
Singers : K.J.Yesudas, S.Janaki
Year : 1993

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக

கடற்கரை தனில் நீயும் நானும் உலவும் பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புது வெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம்மேனி உன் வசமோ

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக

உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் தன் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு
நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக...

காற்றில் வரும் கீதமே...

படம் – ஒரு நாள் ஒரு கனவு
இசை – இளையராஜா
பாடியவர்கள் -ஹரிஹரன், ஸ்ரயா கோஷல், பவதாரினிரி,
இளையராஜா,சாதனா சர்கம்



காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக... ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு... ஆ..
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும் இசை
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது இங்கு
சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் ஏது சொல் தோழி

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக... ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா...

செண்பகமே செண்பகமே...




Song : Shenbagame Shenbagame
Movie : Enga Ooru Pattukaran
Singer : Mano
Year : 1987

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டுச் சத்தம் தேடும் உன்ன பின்னாலே
எப்போதும் உன்ன தொட்டு பாடப் போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
கருத்தது மேகம் தலை முடி தானோ
இழுத்தது என்ன பூவிழி தானோ
எள்ளுப் பூ நாசிப் பத்திப் பேசிப் பேசித் தீராது
உன் பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே...

நிலாவே வா செல்லாதே வா...




Song : Nilaave Vaa
Movie : Mouna Raagam
Singer : S.P.Balasubramaniam
Year : 1986

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே

நிலாவே வா செல்லாதே வா

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
ஆம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா செல்லாதே வா

பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தாள் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
அகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணனே

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்...

Tuesday, August 9, 2011

சல்வார் பூவனம் ஒன்று...




சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே

சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே

உன்னுள் உன்னுள் எத்தனை வாசமடி
என்னுள் என்னுள் இதமாய் வீசுதடி
விழிகளில் கோபமா?
மயக்கமா?

மனம் எந்தன் காதலை
மறுக்குமா ?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே

=====

ஏன் என்னுள் வந்து நீ தான்
விழிகளில் கோவம் காட்டி போனாய்

ஓர் மின்னல் போல நீயும்
மனதினில் தீயை மூட்டி போனாய்
அடி நானோ நானோ
சிறுவனடி
இனி நீயே நீயே
சரணாமடி

தலைமுதல் கால் வரை
இதழ் தரவா?
தலைமுறை முழுதுக்கும்
உடன் வரவா?
இமை தரவா?
விழி தரவா?
உனக்கென்ன உயிர் தரவா?

விழிகளில் கோபமா?
மயக்கமா?

மனம் எந்தன் காதலை
மறுக்குமா?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே

=====

பூங்குயில் ராகம் பாட
உன் குரல்
இரவல் வாங்கி போகும்

வான் மழை தூவும் நேரம்
விழிகளில்
வசந்தம் கவிதை பாடும்

புது தீவே
தீவே
குடி வரவா?

மது பூவே
பூவே
மடி தரவா?

வளர்பிறை கனவுகள்
நீ வளர்த்தாய்
பனி மலர் பார்வையில்
எனை நனைத்தாய்

முகம் கொடுத்தை
இதழ் மறைத்தாய்
வரம் தர ஏன் மறுத்தாய்

=====

விழிகளில் கோபமா
மயக்கமா ?

மனம் எந்தன் காதலை
மறுக்குமா ?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே

உன்னுள் உன்னுள் எத்தனை வாசமடி
என்னுள் என்னுள் இதமாய் வீசுதடி
விழிகளில் கோபமா?
மயக்கமா?

மனம் எந்தன் காதலை
மறுக்குமா ?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே...

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி...




நிலவே நிலவே .....
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி
நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான் கேட்கிறேன்
என் வான்மதியே
நீ எது சொன்னாலும் நான் ஏற்கிறேன்
சொல்லு சொல்லு நிலவே உந்தன் நெஞ்சில் இன்னும் இருளே

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி...

நான் வளர்த்த ஆசை எல்லாம் மேடை ஏறுமா
நாலு திசை சந்திப்பு போல் ஓர் பாதை மாறுமா
காலநிலை மாறுமடி காதல் மாறுமா
மாறுவது உண்மையுள்ள காதலாகுமா
என் எண்ணத்தில் பல வண்ணங்கள்
இது
உன்னால் வந்ததே நீயில்லாமல் அது
ஒவ்வொன்றும் அடி கண்ணீர் சிந்துதே
என் காதல் ஓடம் கரை சேராமல் கடலில் நிற்குதே

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி

நீரிலுள்ள மீனினம் தான் நிலத்தில் நீந்துமா
நிலத்தில் உள்ள மானினம் தான் நீரில் வாழுமா
பூமனதை கசக்கியது காதல் பாவமே
மாறலையே தீரலையே நெஞ்சில் சோகமே
ஒரு மலையிங்கு தன் தவறாலே அது
மணலாய் கரைந்ததே
என் மனங்கொண்ட பெரும் சுமையிங்கு
தினம் உயிரை உறுத்துதே
இது
காட்டிய திசையில் விடையினை தேடி கால்கள் நடக்குதே

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி

நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான் கேட்கிறேன்
என் வான்மதியே
நீ எது சொன்னாலும் நான் ஏற்கிறேன்
சொல்லு சொல்லு நிலவே உந்தன் நெஞ்சில் இன்னும் இருளே
சொல்லு சொல்லு நிலவே எந்தன் நெஞ்சில் இன்னும் இருளே...

மறக்க தெரியவில்லை எனது காதலை...


மறக்க தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
சிறகுகள் முளைக்கும் முன்பே
விலங்கினை பூட்டிக்கொண்டேன் என் தேவியே

மறக்க தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை

காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காகப் பாட இசை கொண்டு வந்தேன்
மௌனங்கள் பரிசாகத் தந்தேன்
சொந்தம் ஆகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்
காதல் மகாராணியே

மறக்க தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை

உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
கடல் நீளம் கூட கரிந்தோடிப் போகும்
என் அன்பில் நிறம் மாற்றம் இல்லை
தேகம் தீயோடு வேகும்போதும்
தாகம் என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி

மறக்க தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
சிறகுகள் முளைக்கும் முன்பே
விலங்கினை பூட்டிக்கொண்டேன் என் தேவியே...