PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Sunday, December 6, 2020

வள்ளி வள்ளி வள்ளி...


வள்ளி வள்ளி வள்ளி
தன் மன்னன் பேர் சொல்லி
சொல்லி சொல்லி சொல்லி
தினம் தவித்தாளே கள்ளி ஹோய் அட
கண்கள் ஏங்குதோ உன் மனசும் ஏங்குதோ
மலரும் நினைவிலே கண்ணீர் ஊஞ்சலாடுதோ ( வள்ளி )
தனிமையில் நடந்தாலே உன்
நிழல் வந்து கைப்பிடிக்கும்
நான் வேர்வையில் நனைந்தாலே
உன் நினைவுகள் விசிறிவிடும்
இரவில் தலையணையே உன்
மடியென மாறிவிடும்
நான் குளிரென தவித்தாலே உன்
கனவுகள் போர்த்திவிடும்
அன்றாட வாழ்வில் பேச்சாக நீயே
என் வாழ்வில் என்றும் மூச்சாக நீயே
உந்தன் வானில் மழையானாள்
உந்தன் உயிரின் விலையானாள்
முகிலடிக்கும் அலையானாள்
உன்னை நினைத்தே சிலையானாள்
ஆஆஆஆஆ ஓஓஓஒஹ்... ( வள்ளி )
வயிற்றினில் நம் குழந்தை
எனை அன்பாய் உதைக்கிறதே
அதன் ஒவ்வொரு அசைவினிலும்
உன் குறும்புகள் தெரிகிறதே
இரு உயிர் சுமந்தபடி என்
பாதங்கள் நடக்கையிலே
இந்த பூமியின் வடிவினிலே
உந்தன் கைகளும் தாங்கிடுதே
நான் தினம் பூசும் பொன் மஞ்சள் நீயே
என் கூந்தல் சீவும் பூந்தென்றல் நீயே
கண்கள் ரெண்டிலும் எட்டிப் பார்த்தாள்
உன்னைக் கண்டதும் கன்னம் சிவந்தாள்
உள்ளக் கதவைத் தட்டிப் பார்த்தாள்
நெஞ்சின் துடிப்பை எண்ணி சிரித்தாள்
ஆஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ( வள்ளி )

வசந்தமே அருகில் வா...


வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா
கனவை சுமந்த கயல்விழி
உறவில் கலந்த உயிர்மொழி
இதயம் முழுதும் புது ஒளி
இரவல் தந்த அவள் மொழி
சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி
என்னுயிர் வாழும் சொர்க்கமும் ஆகி
இமைக்க மறந்து இணைந்தவள்
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா
மழலை சுமந்த மரகதம்
மனதை சுமந்த தளிர்மரம்
நிழலை கொடுத்த வளைக்கரம்
உயிரும் அவளின் அடைக்களம்
புண்ணியம் கோடி செய்தவன் நானும்
ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவின் சிறகை விரித்தவள்
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா...

லைலா லைலா நீ தானே அந்த லைலா...


லைலா லைலா லலலால்லலைலா
லலல லலல லலலால்லலால்ல லைலா
லைலா லைலா நீ தானே அந்த லைலா
குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா...
லைலா லைலா நீ தானே அந்த லைலா
குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா
அழகா அழகா நிஜம் பாதி பேசும் அழகா
பொய்கள் சொன்னால் அது காதலுக்கு அழகா
என் உயிரினில் விழுந்து ஓடும் அதிசய மின்னல் நீ
என் சேலை பூவில் உறங்கும் ரகசிய தென்றல் நீ
ஒரு பாலைவனத்தில் பாயும் வாலிப கங்கை நீ
தினம் காதல் நெருப்பில் என்னை உருக்கும் தங்கம் நீ
என் வானம் என் பூமி என் வாழ்க்கை என் வேட்கை
எல்லாம் இங்கே நீயே தான் வா அன்பே
அழகா அழகா நிஜம் பாதி பேசும் அழகா
பொய்கள் சொன்னால் அது காதலுக்கு அழகா
நீ வளர்க்கும் பூக்களுக்கு கூந்தல் வளர்த்தேன்
நீ எந்தன் நெஞ்சில் குடி இருக்க கோயில் எடுத்தேன்
காவியங்கள் நாம் எழுத நாளும் நினைத்தேன்
உன் பேரை மட்டும் எழுதி விட்டு என்னை மறந்தேன்
போதும் என்னை அள்ளிக் கொள்ளேன் ஓ ஓ ஓ ஓ
கொஞ்சம் கொஞ்சம் உண்மை சொல்லேன் ஹே ஹே ஹே ஹே
எந்தன் நெஞ்சை திறந்து பாரேன் இல்லை என்றால் நுழைந்து பாரேன்
எந்தன் நெஞ்சை திறந்து பாரேன் இல்லை என்றால் நுழைந்து பாரேன்
உண்மை எனக்கு தெரியாதா வா அன்பே
லைலா லைலா நீ தானே அந்த லைலா
குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா
என்னை நானே படிப்பதற்கு தீபம் நீயானாய்
அடி உண்மை சொன்னால் நீயும் கூட எந்தன் தாயானாய்
எந்தன் நெஞ்சம் துடிப்பதற்கு தாளம் நீயானாய்
என் பெண்மை நதிக்கு இரண்டு பக்கம் கரைகள் நீயானாய்
விடிந்திடாத இரவு வேண்டும் ஓ ஓ ஓ ஓ
முடிந்திடாத உறவு வேண்டும் ஓ ஓ ஓ ஓ
பகலில் கூட நிலவு வேண்டும் உறங்கிடாத கனவு வேண்டும்
பகலில் கூட நிலவு வேண்டும் உறங்கிடாத கனவு வேண்டும்
புதையல் அள்ளித் தர வேண்டும் வா அன்பே
லைலா லைலா நீ தானே அந்த லைலா
குயிலா மயிலா நீ காதல் எக்ஸ்பிரஸ் ரயிலா
அழகா அழகா நிஜம் பாதி பேசும் அழகா
பொய்கள் சொன்னால் அது காதலுக்கு அழகா
என் உயிரினில் விழுந்து ஓடும் அதிசய மின்னல் நீ
என் சேலை பூவில் உறங்கும் ரகசிய தென்றல் நீ
ஒரு பாலைவனத்தில் பாயும் வாலிப கங்கை நீ
தினம் காதல் நெருப்பில் என்னை உருக்கும் தங்கம் நீ
என் வானம் என் பூமி என் வாழ்க்கை என் வேட்கை
எல்லாம் இங்கே நீயே தான் வா... அன்பே...

Saturday, December 5, 2020

கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு...



ஏய்... டாக்ஸி டாக்ஸி ச்சே... 
சமயத்துக்கு ஒரு டாக்ஸி கூட கெடைக்காதே 
ஏய்... லுக் அர்விந்த்,,, டோன்ட் டச் மீ 
டாக்ஸி டாக்ஸி...

கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு 
ஷட் அப் டோன்ட் டாக் டு மீ 
ஏய்... டாக்ஸி டாக்ஸி டாக்ஸி...

என் பொன்மணிக்கு கோபம் வந்தா 
மின்னும் பனிப் பூவு 
எவளாவது ஏமாந்தவ காதுல பூ வச்சிருப்பா 
அவ கிட்ட போய் சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழைப் பூவு 
அடடா என் கவியரசர் கம்பா 
உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்து விடும் நோவு 
ஆஹா... ஆடு நனையுதுன்னு ஓநாயி அழுததா

வீண் கோபம் ஏன்....ஜஜஜ ஜஜா... 
ஆண் பாவம் ஏன்.... ஏ பப்பர பப்பா 
ஐ லவு யூ ஐ லவு யூ 
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி 

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு 
கேக்க முடியாது போய் தொலையிறியா ஹையோ... 
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு 
அதே பழைய பல்லவிய திருப்பி சொல்லாதே போயா...

எட்டி எட்டிச் சென்று வெட்டும் பார்வை கொண்டு 
சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது 
ஆங்... சிற்றிளம் பூவு ஆட்டோ தேடுது டாக்ஸி தேடுது 
இன்னொரு ஜோடிக்கு ஆளக் கூட தேடும்


சொல் ஏன் இப்படி ஏன் அம்மணி நாடகம் 
ஆமா... நாடகம்... திருநாவுக்கரசி... 
சொல்ல வந்துட்டாரு திருநாவுக்கரசர்...


நித்தம் நித்தம் என்னை சுற்றிச் சுற்றி வந்து 
வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா 
ஆமா... தீந்து போச்சு எம்டியா சுத்திட்டு இருக்கேன் 
ஹையா போய்ட்டு வரீங்களா

ஓ சிங்காரியே இங்கேனடி ஆத்திரம் 
ஆத்திரமா சும்மா இருய்யா 
வயிறு பத்திகிட்டு எரியுது ஃபயர் இஞ்சன்... 
நீ இல்லாமல் நானா என் பூங்கொடி 
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

நான் இல்லாமல் நீயும் இங்கேதடி 
தோ இருக்கேனே நல்லாத்தானே இருக்கேன் பாரு 
பூந்தென்றலே என் செல்வமே 
ரா பாப்பபா ரப்பா பாப்பபா ஐ லவு யூ ஐ லவு யூ 
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு 
ஸ்டாப் இட் மேன் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு பா 
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு 
இந்த சினிமா டைலாக் எல்லாம் சொல்லி 
என்ன போரடிக்காதே போயா

வீண் கோபம் ஏன்.... வெவெவெவெ 
ஆண் பாவம் ஏன்......பாவம் மை ஃபூட் 
ஐ லவு யூ ஐ லவு யூ 
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு 
ஹலோ கேன் யூ கிவ் மீ லிஃப்ட் தேங்க் யூ 
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு

சுட்டும் விழிச் சுடர் என்று ஒரு பொய் கொண்டு 
பாடினால் ஆஹா ஓஹோ என்கிறாய்” 
அது பாரதியார் பாட்டுயா 
அவனவன் ட்யூனத்தான் திருடுறான்னா 
நீ பாட்டையே திருடுற

பொய் பாட்டில் சொன்னால் கவி என்கிறாய் கண்மணி
அடப் பாவி பாரதியார் பாட்டையே பொய்ங்கிறியா

உன் மேல் ஆசை வைத்து 
நான் ஓர் பொய்யைச் சொன்னால் 
சீறிடும் தென்றல் ஆகிப் போகிறாய்

எஸ்... உனக்காக மையம் கொண்ட இந்த புயல் 
இப்போ கரைய கடந்துடுச்சு போ 
மெய் பாட்டில் சொல்வேன் 
ஏற்றுக் கொள்வாய் கண்மணி

நீ பொய்யிலே பிறந்து பொய்யிலே வளந்தவன் 
உன் கிட்ட எதுயா மெய்யி 
தேனைப் போன்ற காதல் வேம்பாகுமா 
ஹா காதலாவது கத்திரிக்காயாவது

தேவி என்னைச் சேர வீம்பாகுமா 
டோன்ட் ஃபோலோ மீ 
என் நெஞ்சிலே உன் மந்திரம்

ரா பாப்பபா ரப்பா பாப்பபா ஐ லவு யூ ஐ லவு யூ 
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு 
பெரிய கிருஷ்ண பரமாத்மா 
இவரு சொல்ற கீதைய கேக்கணுமா 
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு

சும்மா இருயா மின்னுவதெல்லாம் 
பொன்னல்ல தெரிஞ்சுக்கோ 
வீண் கோபம் ஏன்... நீ திருந்தவே மாட்டே 
ஆண் பாவம் ஏன்.....ஷோ... தாங்கலயா 
ஐ லவு யூ ஐ லவு யூ 
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி ( என் கண்மணி)

Sunday, May 15, 2016

என் ஜீவனின் பாடலை கேளடி...


என் ஜீவனின் பாடலை கேளடி
என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி

பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ
உனக்காக உயிர் போகும் போதிலும் அழுவேனோ
தேவதை உன் வாசலே சன்னிதி
காதலில் கண் மூடினால் நிம்மதி

கயல் விழியினில் என்னை ஒரு முறை அழைத்திடு தேனே
புயல் மழையினில் நனைகிற உடல் எரியுது மானே
இதுவரை மனக்கதவினை அடைத்தது போதும்
அணுஅணுவென ஒரு மனதினை உடைத்தது போதும்
என்னை எண்ணி வாழவில்லை
உன்னை எண்ணி வாழ்கிறேன்
உன்னை மீண்டும் வாழவைக்க
வாழும்போதே சாகுறேன்
இலையுதிர்த்து போகலாம்
வசந்தம் மீண்டும் தோன்றலாம்
காலம் மாறும் போது நீயும் மாறக் கூடாத

இளமையில் ஒரு அழகிய மலர் கருகிடலாமா
உடலோடு உயிர் மெழுகென தினம் உருகிடலாமா
பழமையை உடை புதுமைகள் படை எழுந்திரு பெண்ணே
சிறையினை விடு சுதந்திரம் முழு பறந்திடு கண்ணே
நேற்றுப் போன தாலியோடு
வாழ்க்கை எல்லாம் போறதா
வேறு தாலி வேறு மாலை தோஷம் இன்றே ஆகலாம்
பின்பும் மாலை சூடலாம்
நாளை நீயும் வாழலாம்
காதல் இல்லா ஜீவன் இந்த மண்ணில் எங்குண்டு...

Wednesday, October 29, 2014

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...

படம்: புதிய பறவை
இசை: விஸ்வநாதன்–ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்



எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே ஓ.. உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...

ஆசையில் பிறப்பது துணிவு...

படம்: தென்றல் வீசும்
இசை:
பாடியவர்: P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்



ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு

ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு

ஆசையில் பிறப்பது துணிவு

விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை
காதலன் நினைவில் கன்னியின் ஆசை
விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை
காதலன் நினைவில் கன்னியின் ஆசை
பாவலன் மனதில் பாடிடும் ஆசை
பாவலன் மனதில் பாடிடும் ஆசை
படைத்தவன் மனதில் நொடிக்கொரு ஆசை
படைத்தவன் மனதில் நொடிக்கொரு ஆசை

ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு

இளமையில் புதுமைகள் படிப்பதில் ஆசை
முதுமையில் படித்ததை நினைப்பதில் ஆசை
இளமையில் புதுமைகள் படிப்பதில் ஆசை
முதுமையில் படித்ததை நினைப்பதில் ஆசை
வருவதும் போவதும் காலத்தின் ஆசை
வருவதும் போவதும் காலத்தின் ஆசை
திருமண வயதில் தினமொரு ஆசை
திருமண வயதில் தினமொரு ஆசை

ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு...

ஆறு மனமே ஆறு...

படம்: ஆண்டவன் கட்டளை
இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்



ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆடிய ஆட்டமென்ன?...

படம்: பாத காணிக்கை
இசை: T K ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்



ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு...

ஆடி அடங்கும் வாழ்க்கையடா...

படம் : நீர்க்குமிழி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : வி.குமார்
இயற்றியவர் : 'உவமைக் கவிஞர்' சுரதா



ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா...