PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, July 10, 2014

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி...

படம்: சரஸ்வதி சபதம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்




அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய் அம்மா பேச வைத்தாய்
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி...

No comments:

Post a Comment