PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, August 13, 2011

தென்மதுரை வைகை நதி...




பாடல் : Thenmadurai Vaigai Nadhi
படம் : தர்மத்தின் தலைவன்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா, மலேசியா வாசுதேவன்
வருடம் : 1988


தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தேய்கின்றது
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தென்மதுரை வைகை நதி

நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய்க் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தென்மதுரை வைகை நதி

நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
உன்னோடுதான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீதானம்மா என் தாரம்
மாறாதம்மா என்னாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தேய்கின்றது
பொன் மாலை நிலா
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தென்மதுரை வைகை நதி...

No comments:

Post a Comment