PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, August 9, 2011

சல்வார் பூவனம் ஒன்று...




சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே

சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே

உன்னுள் உன்னுள் எத்தனை வாசமடி
என்னுள் என்னுள் இதமாய் வீசுதடி
விழிகளில் கோபமா?
மயக்கமா?

மனம் எந்தன் காதலை
மறுக்குமா ?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே

=====

ஏன் என்னுள் வந்து நீ தான்
விழிகளில் கோவம் காட்டி போனாய்

ஓர் மின்னல் போல நீயும்
மனதினில் தீயை மூட்டி போனாய்
அடி நானோ நானோ
சிறுவனடி
இனி நீயே நீயே
சரணாமடி

தலைமுதல் கால் வரை
இதழ் தரவா?
தலைமுறை முழுதுக்கும்
உடன் வரவா?
இமை தரவா?
விழி தரவா?
உனக்கென்ன உயிர் தரவா?

விழிகளில் கோபமா?
மயக்கமா?

மனம் எந்தன் காதலை
மறுக்குமா?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே

=====

பூங்குயில் ராகம் பாட
உன் குரல்
இரவல் வாங்கி போகும்

வான் மழை தூவும் நேரம்
விழிகளில்
வசந்தம் கவிதை பாடும்

புது தீவே
தீவே
குடி வரவா?

மது பூவே
பூவே
மடி தரவா?

வளர்பிறை கனவுகள்
நீ வளர்த்தாய்
பனி மலர் பார்வையில்
எனை நனைத்தாய்

முகம் கொடுத்தை
இதழ் மறைத்தாய்
வரம் தர ஏன் மறுத்தாய்

=====

விழிகளில் கோபமா
மயக்கமா ?

மனம் எந்தன் காதலை
மறுக்குமா ?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே

உன்னுள் உன்னுள் எத்தனை வாசமடி
என்னுள் என்னுள் இதமாய் வீசுதடி
விழிகளில் கோபமா?
மயக்கமா?

மனம் எந்தன் காதலை
மறுக்குமா ?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடக்கிறதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மணக்கிறதே...

No comments:

Post a Comment