PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, August 27, 2009

ஆசை ஆசை இப்பொழுது பேராசை....



ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?

கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது?
(ஆசை ஆசை..)

தலை முதல் கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது எப்பொழுது?
ஓ.. இடைவெளி குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது?
அறுகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது?
திருவிழா ஆகிறேன் இப்பொழுது
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது?

ஆசை ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை

புல்வெளி ஆகிறேன் இப்பொழுது
நீ பனித்துளி ஆவது எப்பொழுது?
ஆ... கொட்டும் மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது?
கிணற்றில் சூரியன் இப்பொழுது
உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது?
புடவை கருவில் இப்பொழுது
நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது?
(ஆசை ஆசை..)

படம்: தூள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, சங்கர் மகாதேவன்

No comments:

Post a Comment