PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, February 18, 2013

தோல்வி நிலையென நினைத்தால்...

திரைப்படம்: ஊமை விழிகள்
இயற்றியவர்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்




தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து – தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் – உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து – தாயின்
கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? – உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?..

5 comments:

  1. 1970பதுகளில் இருந்தே போராட்ட காலமெல்லாம் ஈழத் தமிழர் பூமியெங்கும் மக்கள் அடிக்கடி கேட்ட பாடல் இதுதான். ஆபாவாணன் ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை? - வ.ஐ.ச.ஜெயபாலன்

    ReplyDelete