PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, July 13, 2012

நானி என் பேரு...

படம்: நான் ஈ 
பாடலாசிரியார்: கார்கி
இசை: மரகதமணி 
பாடியவர்: ஆச்சு , ஷிவானி  





நானி என் பேரு
நான் குட்டி ஈ தான் பாரு
அணு குண்டு போடும் வண்டு நானு
தொடங்கிடுச்சு போரு
உன் கோட்டைக்குள்ள வாறேன்
உனை வேட்டையாடப் போறேன்
உன் கண்ணுக்குள்ள கைய விட்டு
ஆட்டிப்பாக்கப் போறேன்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா!
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா!

பொறி என்ன செய்யும்,
காட்டுக்குள்ள விட்டா?
ஒட்டுமொத்தம் சுட்டெரிச்சு
சாம்பலாக்கிடாதா?
துளி என்ன செய்யும்,
தொண்டைக்குள்ள விட்டா?
மண்டைக்குள்ள நஞ்ச ஏத்தி
உன்னை சாய்ச்சிடாதா?

இந்த அண்டம் கூட தொடங்கும் முன்ன வண்டின் அளவுதான்
ஈன்னு என்ன பாத்தான்
என்ன பூச்சியில சேத்தான்
அங்க தான அவன் தோத்தான்
நான் மூச்சுக்குள்ள நச்சு பாய்ச்ச வந்திருக்கும் சாத்தான்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா

நான் உடனடியா செஞ்சு முடிக்க
பத்து விஷயம் கிடக்குது
todo... todo... todo todo...
one உன்ன கொல்லணும்
two உன்ன கொல்லணும்
three உன்ன கொல்லணும்
four உன்ன கொல்லணும்
five உன்ன கொல்லணும்
six உன்ன கொல்லணும்
seven உன்ன கொல்லணும்
eight உன்ன கொல்லணும்
nine உன்ன கொல்லணும்
ten உன்ன கதற கதற கதற கதற
பதற பதற பதற பதற
சிதற சிதற வெட்டி வெட்டி கொல்லணும்

ரெக்க ரெக்க ரெக்க
ரெக்க ரெண்டின் ராகம் கேக்குதா?
உன் செவியோரம் மரண ஓலம்
எட்டிப் பாக்குதா?
ஈயோட காலு கூட
ஈட்டி போல மாறும்
உன கொன்னு தீத்த பின்ன தான்
என் கொலவெறியும் தீரும்

செத்துப் பொழச்சு எமன பாத்து
சிரிச்சவன் நானி!
நெய்யு மேல மொய்க்க
ஈயா நானு? இல்ல
உன் நெஞ்சில் முள்ள தைக்க
பேயா வந்த தொல்ல
உன் எல்லைக்குள்ள உன்ன கொல்ல அவதரிச்ச வில்லன்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா!...

2 comments: