PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, September 16, 2013

ஆசை ஆசை தூக்கம் விற்று தானே...

படம் : திருப்பதி ஏழுமலை வெங்கடேச



ஆசை ஆசை
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
மீன்கள் வாங்க ஆசை
நாக்கை விற்று தேனை வங்கி
நீரை விற்று தாகம் வங்கி
பூவை விற்று வாசம் வங்கி
தாயை விற்று பாசம் வங்கி
பூட்டை விற்று சாவி வாங்கும் 
பொல்லாத ஆசை ஆசை

நீரினில் வாழும் மீன்களின் கூட்டம்
அதிசயம் ஏதும் இல்லை
அந்த நீரினில் வேகும் மீன்களும்
குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை
அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால்
நிம்மதி சென்று விடும்
வரவுக்கு மீறி செலவுகள் வந்தால்
வழிகள் மாறிவிடும்
வெங்கடசனெ சீனிவாசனே
மனம் போகுதே
பணம் போட்ட பாதையில் தானே

மனிதன் பசிக்கு கோழிகள் இரை தான்
கோழி பசிக்கு புழு இரை தான்
புழுவின் பசிக்கு மண் இரை தான்
மண்ணுக்கு மனிதன் தான்
மண்ணில் வந்தது
மண்ணில் முடியும்
மனதுக்கு தெரிவதில்லை
உறவில் வந்தது விரைவில் முடியும்
உலகம் அறிவதில்லை
அலைபாயுதே நிறம்மாறுதே
மனித வாழ்விலே
ஆசையை ஆசை தின்று விடும்...

1 comment: