PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, October 29, 2014

ஆடிய ஆட்டமென்ன?...

படம்: பாத காணிக்கை
இசை: T K ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்



ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு...

1 comment:

  1. உலகின் எங்கோவொரு மூலையில், என்றோ ஒருவர் எழுதிய பாட்டொன்று, அதே உலகின் மற்று எங்கோவொரு மூலையில் இருக்கும் வாழ்க்கையின் உண்மையை உணர்த்துமேயானால் அது இறைவன் அவர் மனதில் அமர்ந்து எழுதிய ஒரு பாடலாகத்தான் இருக்க இயலும்! முத்துவின் சிந்தனை.

    ReplyDelete