PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, June 14, 2010

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா...

படம் : தாயின் மணிக்கொடி (1998)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : கோபால் சர்மா, தேவி
பாடல் வரி : வைரமுத்து


நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா...

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்

கண்மூடினால் கண்மூடினால்
அந்நேரமும் உன்னை கண்டேன்

ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா

மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா

உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா

இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

ஒ... இதே சுகம் இதே சுகம்
என்னாளுமே கண்டால் என்ன

இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன

ம்... முத்தத்திலே பல வகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு

இப்படியே என்னை கட்டிக்கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு

அச்சப்பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

இதழோடு இதழ் சேர்த்து

உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா...

No comments:

Post a Comment