PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, June 14, 2010

ஒளியிலே தெரிவது தேவதையா...

படம் : அழகி (2002)
இசை : இளையராஜா
பாடியவர் : கார்த்திக், பவதாரணி
பாடல் வரி : பழனிபாரதி

ஒளியிலே தெரிவது தேவதையா
ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசம் இல்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஒளியிலே தெரிவது தேவதையா
தேவதையா... தேவதையா...

சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே
நடப்பது என்னென்னு
என்ன எண்ணியும் புரியவில்லையே
நடந்தது என்னென்னு

கோவில் மணிய யாரு அடிக்கிறா
தூங்க விளக்கை யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாமா நின்று ஒளிரனும்

ஒளியிலே தெரிவது நீயில்லையா
நீயில்லையா... நீயில்லையா...

புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஒர் சின்ன மேனியும்
கலந்தது பூவுக்குள்ளே

அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல

ஒளியிலே தெரிவது நீயில்லையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசம் இல்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஒளியிலே தெரிவது தேவதையா
தேவதையா... தேவதையா...

No comments:

Post a Comment