PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, August 20, 2010

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...

திரைப்படம்: பெண்ணின் மனதை தொட்டு
பாடல்: கண்ணுக்குளே உன்னை
பாடகர்கள்: உன்னிகிருஷ்ணன்
இசை: SA. ராஜ்குமார் பாடல்
ஆசிரியர்: Vaali


கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் .
பூவெல்லாம் உன் வாசம்..
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேக்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான்
சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி...!

நெடுங்காலமாய் உறங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே..
தரிசான என் நெஞ்சில்
விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
என் ஜீவன் வாழுதடி...
நீ ஆதரவாக தோழ் சாய்ந்தால்
என் ஆயுள் நீழுமடி...!

மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!

No comments:

Post a Comment