PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, December 31, 2011

உயிர் தந்த தாயே...

படம் - பசுபதி c o ரசக்கபலயம்
பாடல் -உயிர் தந்த தாயே




உயிர் தந்த தாயே
உன்னை காப்போம் தாயே
ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி

உன் இரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோம் அம்மா
உயிர் தந்த தாயே உன்னை காப்போம் தாயே

பூ என்று பார்த்தல் ஒவ்வொரு
பூவுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு
தாய் என்று பார்த்தல் எல்லா
தாய்க்கும் ஒரே குணம் தான் உண்டு

எதுவும் நிறையும் தாய் இருந்தால் தான்
எல்லாம் மறையும் தாய் இருந்தால் தான்
எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி

சாமி என்று பார்த்தல் எல்லா
சாமிக்கும் ஒவ்வொரு குணம் உண்டு
தாய் என்று பார்த்தல் எல்லா
தாய்க்கும் ஒரு குணம் தான் உண்டு

எதுவும் கிடைக்கும் தாய் இருந்தால் தான்
எல்லாம் தொலையும் தாய் இருந்தால் தான்
எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி...

4 comments: