PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, September 7, 2009

நான் காணும் உலகங்கள்...


நான் காணும் உலகங்கள்
யார் காண கூடும்
நான் காணும் உலகங்கள்
யார் காண கூடும்

சொல்வது யார் சொல் பெண் பனித்துளியே
மெல்லென பேர் சொல் பசும் புல்வெளியே
என்னை காணும் அன்னை பூமி
உன்னை காணவே இங்கே
வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம்
வானம்பாடி போலே பாடும்
வாழ்க்கை என்றுமே வேண்டும்
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்

பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை
அதில் புன்னகை மனம் அறிவேன்
கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை
கை தொட்டதும் உணர்வறிவேன்
குக்கூவென கூவும் குயிலகளின்
கூட்டத்தில் நான் இணைவேன்
கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை
ரெக்கை விரித்திடுவேன்
உங்கள் முகம் பார்த்ததில்லை
வரைந்ததில்லை நான்
என் முகத்தினை நீங்கள் எல்லாம்
பார்த்ததினால்தான்
உங்கள் மேடை பாடல் நான் ஓ
(நான் காணும்..)

ராத்திரி பேச்சினில் அம்மா கதைகளை
பூத்தது பல நினைவு
கேட்டிடும் கதைகளில் கலந்தே உலவிட
சுற்றி வரும் கனவு
கற்றவர் பேசிட காதில் கேட்டதில்
பெற்றதெல்லாம் வரவு
வாட்டிய வருமையில் எனக்குள் திறந்தது
கற்பனையின் கதவு
வாழ்விலே நான் கண்டுகொண்டேன்
தேடல்தானே
வாழ்க்கை பாடும் பாடினிலே
பாடகன் ஆனேனே
பாட்டில் வாழும் பூங்குயில் நான் ஓ
(நான் காணும்..)

படம்: காசி
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்

No comments:

Post a Comment