PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, June 7, 2012

காதலுக்கு கண்களில்லே மானே...

படம்: நாடோடி பாட்டுக்காரன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி. ஸ்வரணலதா
இசை:இளையராஜா






காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாயவலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே

என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே
உன்னை எண்ணாத நாளேது பூ மானே
அடி உன்னோடு நானும் வந்து சேராது
என் தேகம் மண்ணில் இங்கே சாயாது
கங்கைக்கு ஒரு கரைக் கட்டலாம்
காவிரிக்கும் அணை கட்டலாம்
காதலுக்கு வேலி கட்டலாமா
ஏ மண்ணில் வெச்சு மூடும் விதை யாவும் பயிராகும்
மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா

காதலுக்கு கண்கள் இல்லை ராசா
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் ரோசா
காதலுக்கு கண்கள் இல்லை ராசா

தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று
சுடு வெண்ணீரில் விழுந்தாலே என்னாகும்
இளம்?? தண்ணீரில் ஆடும் இந்த ரோஜாப்பு
அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு
எப்பவுமே மனசில் ஒன்னு
எண்ணி எண்ணி நிறுத்தும் என்னை
கவிதை?? செய்வார் இங்கு யாரு
நல்ல துள்ளி வரும் காற்று தடைக் காற்று தயங்காது
எந்நாளூம் என் நேசம் மாறாதய்யா

காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாயவலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே...

2 comments: