PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, June 14, 2012

யார் வந்து பூவுக்குள்...

படம்: கண்டேன் சீதையை
இசை: உதயா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்



யார் வந்து பூவுக்குள் கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள் புகை வண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எறிகிறதே
வண்ணத்து பூச்சிகள் வானவில்லை சூடியதோ
வாலிப திறைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில் சேர்ந்திட கூடும்
திசை மாறும் போதும் தென்றலும் பூக்களை மோதும்


முதல் முதல் ஒரு ஓலை வந்ததோ
உயிர் வரை அது ஊடல் செய்ததோ
(முதல்..)
ஆடை மறைவு ஓடை மீன்கள்
பரதம் தானுடுதோ
ஓடும் முகிலை தேடி பிடித்து
வானம் முகம் மூடுதோ
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அலைப்போலே வந்து பாடுது காவடி சிந்து
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அடிப்போட்டால் கூட ஆனந்த மௌனம் இன்று


புது புது ஒரு யுத்தம் வந்ததோ
புயல் மழை இடி போலெ வந்ததோ
சிட்டுக்குருவி சிறகை வாங்கி
பறக்கத்தான் தோன்றுதோ
வெட்ட வெளியில் எட்டுப்போட்டு
ஓடத்தான் தோன்றுதோ
சந்தோச போர்க்களம் ஆரம்பம்
மழைக்கொட்டும் போதும் வானத்தை பார்த்திட தோன்றும்
சந்தோச போர்க்களம் ஆரம்பம்
மல்லிகை பூவில் ஆடைகள் தைத்திட தோன்றும்...

No comments:

Post a Comment