PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, January 18, 2012

சுற்றாதே பூமித் தாயே நில்லு...


படம்: நிலவே முகம் காட்டு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சித்திரா

பாடலாசிரியர் :- வாசன்

சுற்றாதே பூமித் தாயே நில்லு
என் மன்னன் எங்கே என்று சொல்லு
வீசாதே தென்றல் காற்றே நில்லு
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு


கோடி விண்மீன்களில் எந்தன் விண்மீன் எங்கே
என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே
எந்தன் சோகத்தை சொல்கின்ற சொல்லேது ...

சுற்றாதே பூமித் தாயே நில்லு
என் மன்னன் எங்கே என்று சொல்லு

அதி காலையில் துயில் வேலையில்
கனவாக தீண்டி விட்டு நீ போனாய்
துயில் நீங்கினேன் உன்னை தேடினேன்
என்னை தாண்டி தூரம் என்று நீ ஆனாய்

உள்ளுக்குள் உன்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணில் என்னை காண வேண்டும்
வானத்தில் வெண்ணிலவின் வீதி
சொல்லாதோ உன்னை காணும் தேதி

உந்தன் தோளில் பூவாய் விழ வேண்டும்
எந்தன் சோகம் சொல்லி அழ வேண்டும்
அந்த நாள் காண என் நெஞ்சம் தவிக்கும் ...


சுற்றாதே பூமித் தாயே நில்லு
என் மன்னன் எங்கே என்று சொல்லு
வீசாதே தென்றல் காற்றே நில்லு
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு


ஆஅஹ் ...ஆஹ ...ஆஅஹ் ..ஆஅஹ் ...ஆஅஹ் ..அஆஹா

ஒரு நாழிகை உன்னை பார்த்த பின்
மீண்டும் பார்வை போகும் இனி போகட்டும்
உந்தன் தேன் குரல் கொஞ்சம் கேட்ட பின்
எந்தன் ஜீவன் ஓயும் இனி ஓயட்டும்

என்றேனும் உன்னை காண கூடும்
என்று நீ எந்தன் ஜீவன் வாழும்
சாகாத காதல் வரம் வேண்டும்
ஓயாமல் உன்னை தொழ வேண்டும்

காற்றை தேடும் புல்லாங்குழல் போலே
ஏங்கி பாடும் ஒற்றை குயில் ஆனேன்
உன்னை காணாமல் என் கண்கள் தூங்காது ...


சுற்றாதே பூமித் தாயே நில்லு
என் மன்னன் எங்கே என்று சொல்லு
வீசாதே தென்றல் காற்றே நில்லு
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு


கோடி விண்மீன்களில் எந்தன் விண்மீன் எங்கே
என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே
எந்தன் சோகத்தை சொல்கின்ற சொல்லேது ...


சுற்றாதே பூமித் தாயே நில்லு
என் மன்னன் எங்கே என்று சொல்லு
வீசாதே தென்றல் காற்றே நில்லு
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு...

No comments:

Post a Comment