PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, January 13, 2012

நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா...

படம் : தாலாட்டு பாடவா (1990)
இசை : இளையராஜா
பாடியவர் : அருண்மொழி, S. ஜானகி
பாடல் வரி: வாலி


நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா

காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை
கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை
காதல் அலை வீசும் கடல் தான் மனது
காலம் பல காலம் இது வாழுவது
தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது
தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது
நீ இன்றி நானேது நேசமோடு வாழும் மாது
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா

நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா

கூவி வரும் புதுக் குயிலின் குரல் வழியே ஒரு துயரம்
பாடி வரும் மொழிதனிலே பாதியிலே ஒரு சலனம்
ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை
உண்மை இதை கண்டும் மனம் கேட்பதில்லை
காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும்
கையோடு கையென்று சேர்ந்திருக்கும்
வாடாதே வாடாதே வாசம் இந்த பூவைத் தேடும்
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா

நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா

அன்பே அன்பே எந்தன் அன்பே

வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா

நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா...

No comments:

Post a Comment