PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, January 18, 2012

எந்தன் உயிரே எந்தன் உயிரே...


படம்: உன்னருகே நானிருந்தால்
இசை: தேவா
பாடியவர்கள்: சித்ரா, கிருஷ்ணராஜ்
வரிகள்: தாமரை


எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்

(எந்தன் உயிரே.....)

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன்
என்னை தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க
உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை

சின்ன சின்ன கூத்து
நீ செய்யிறதை பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்

வண்ண வண்ணப் பாதம்
நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நானிருப்பேன்

கவலைகள் மறக்கவே
கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்

(எந்தன் உயிரே.....)

உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை
நிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய்

உன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சத் தாலி மின்ன மின்ன கேளி பண்ண
பக்கத்தில் நான் கிடைப்பேன்

கண்ணில் மீனை வச்சி
புத்தும் புதுத் தூண்டில்
போட்டது நீயல்லவா

கள்ளத்தனம் இல்லா
உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா

உலகமே காலடியில்
கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்...

No comments:

Post a Comment