PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, January 17, 2012

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ...


படம் : சிறைச்சாலை
பாடல் : செம்பூவே பூவே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: காதல் மதி
பாடியவர்கள் : சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே
படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஒ.ஹோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஒ.ஹோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே

அந்தி சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோக பூவில் முத்த கும்மாளம்
தங்க திங்கள் நெற்றி பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்

தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா..
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி
ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பாட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீரியதோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே

இந்த தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ
அந்த காமன் அம்பு என்னை சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலருக்கும் சேலை பொன்பூவே…

மின்னியது தாமரை வந்து தொடும் நாளிலா
பாவைமையல் சாயுதே மன்னன் மணி மார்பிலோ..

முத்ததாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தாலோர் ஆடை சூடிக்கொள்வேன் நானே
தாயாகும் வழி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே…
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஒ.ஹோ
படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஒ.ஹோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே...

No comments:

Post a Comment